புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2015

மீண்டும் ஒரு முறை ஐரோப்பிய தமிழரால் குலுங்கியது ஜெனீவா மாநகரம்

 
 
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஜெனீவா ஐ.நா முன்றலின் முன்பாக புலம்பெயர் தமிழர்கள் அணி திரண்டு போராட்டம் நடத்துள்ளனர்.
தமிழின அழிப்புக்கு அனைத்து வகையிலும் நீதி வேண்டும் என வலியுறுத்தி ஜெனிவாவில் அமைந்துள்ள ஐ.நா முன்றலில் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தமிழ் மக்கள் உரிமை முழக்கத்துடன் ஒன்று கூடினர்
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொடும்பாவியை கட்டி இழுத்து தமது எதிர்ப்பை வெளிக்காட்டியதுடன், “ we want tamil eealam” என்ற கோஷத்தையும் எழுப்பினர். ஐ.நா பிரதான நுழைவாயிலின் முன்னால் சிவப்பு, வெள்ளை நிற கயிறுகளால் மறிக்கப்பட்டதுடன் முன்பக்கமும் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.
 

ஐ.நா முன்றலில் கூட்டம் நடைபெறும் போது பாதுகாப்பு சாதாரணமாக இருப்பது வழமை. இம்முறை வழமைக்கு மாறாக பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்ததுடன், ஜெனிவா காவல்துறையினர் அதி உச்ச பாதுகாப்பு வழங்கி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஊர்வலம் ஆரம்பமான இடத்திலிருந்து கூட்டம் நடைபெறவிருந்த இடம் வரை காவல் துறையினரின் வாகனம் பாதுகாப்பு வழங்கியதுடன், வீதியின் இரு மருங்கிலும் பொலிசாரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.

ad

ad