புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மார்., 2015

சென்னையில் பாதிப்பில்லை: பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடியது! (படங்கள்)


காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக விவசாயிகள் நடத்தி வரும் முழு
அடைப்பு போராட்டத்தை சென்னை மக்கள் புறக்கணித்தனர். வழக்கம்போல் சென்னையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.


காவிரியில் புதிய அணைகள் கட்டும் கர்நாடகாவைக் கண்டித்து தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. போராட்டத்துக்கு அனைத்து கட்சிகள், விவசாய சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

கர்நாடக அரசு மேகதாது, ராசிமணல் என்ற இடங்களில் 3 புதிய அணைகள் கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த அணைகள் கட்டப்பட்டால், மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் மேற்கண்ட அணைகளிலேயே தடுக்கப்பட்டு விடும். இதனால் தமிழகத்தில் விவசாயம், தொழில்கள் பாதிக்கப்படுவதோடு, குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்படும். எனவே சட்டத்திற்கு புறம்பாக கட்டப்படும் இந்த அணைகளுக்கு  தடை விதிக்க வேண்டும் என்று கோரி விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த போராட்டத்திற்கு திமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பாமக, தமாகா, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் ஆளும் கட்சியான அதிமுக நேரடியாக ஆதரவு தெரிவிக்கவில்லை.
 
இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு தமிழக மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் வைத்திருந்தனர். ஆனால், இந்த வேண்டுகோளை புறக்கணித்துள்ள சென்னைவாசிகள், வழக்கம்போல் தங்கள் அலுவலகத்திற்கு சென்றனர். ரயில், பேருந்துகளும் வழக்கம்போல் இயக்கப்பட்டதோடு கூட்டம் அலைமோதியது. ஆட்டோக்கள் வழங்கம் போல் இயக்கப்பட்டன.

பேருந்துகளில் கூட்டம் அலைமோதியது. முண்டியடித்துக் கொண்டு பொதுமக்கள்  ரயில், பேருந்துகளில் ஏறினர். அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டத்தை மக்கள் புறக்கணிப்பதில் ஒரு நியாயம் இருந்தது. ஆனால், நமது மாநிலத்தில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய வகையில் கர்நாடகா அணை கட்ட முயல்வதை தடுக்கும் வகையில் நடத்தப்படும் முழு அடைப்பு போராட்டத்திற்கு தமிழக மக்கள் முன் வராததுதான் வேதனை விஷயம்.

ad

ad