புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மார்., 2015

டோனியை கண்கலங்க வைத்த தோல்வி இணையத்தில் பரவலாகும் புகைப்படம்

உலகக்கிண்ணத் தொடரின் அரையிறுதியில் அவுஸ்திரேலிய அணியிடம் இந்தியா தோல்வி பெற்ற போது அணித்தலைவர் டோனி கண்கலங்கிய புகைப்படம் பரவலாகியுள்ளது. நடப்பு உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி நடை போட்ட இந்திய அணி, தொடர்ச்சியாக 7 வெற்றிகளை குவித்து தள்ளியது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் சிட்னியில் நடந்த அரையிறுதியில் இந்தியா, அவுஸ்திரேலியாவிடம் 95 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது. போட்டி முடிந்த போது இரு அணிகளின் அணித்தலைவர்கள் கருத்தை நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்டார்.

அப்போது டோனியின் கருத்தை கேட்க அழைத்தபோது, அவரது கண்கள் கலங்கியிருந்தன. இதை டி.வி.யில் பார்த்த ரசிகர்களும், தங் கள் தொலைபேசிகளில் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். அந்த புகைப்படம் தற்போது பரவலாக சுற்றிவருகிறது. கூலான அணித் தலைவர் என்று அழைக்கப்படும் டோனியே கண்கலங்கி விட்டார் என்று ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை கொட்டித் தீர்க்கின்றனர்.

முன்னதாக நியூசிலாந்துக்கு எதிரான, அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா தோற்ற போது, அந்த அணியின் மோர்க்கல், அணித்தலைவர் டிவில்லியர்ஸ் ஆகியோர் அழுததும் ரசிகர்களை மிகவும் பாதித்திருந்த
து

ad

ad