புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மார்., 2015

நிறைவுக்கு வந்தது காணாமல்போன உறவுகளின் உண்ணாவிரதப் போராட்டம்


காணாமல்போனவர்கள் தொடர்பிலான உண்மை நிலையினை வெளிப்படுத்தக்கோரி கடந்த மூன்று தினங்களாக யாழ்.நல்லூர் ஆலயச் சுற்றாடலில் நடைபெற்றுவந்த கவனயீர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் இன்றைய தினம் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த உண்ணாவிரதப் போராட்டம் சூழற்சி முறையில் இடம்பெற்றதுடன், காணாமல்போனவர்களின் உண்மை நிலையை வெளியிடக்கோரியும், ஐ.நா சர்வதேச விசாரணை அறிக்கையினை வெளியிடக்கோரியும் நடத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் 3வது தினமான இன்றைய தினமும் காணாமல்போனவர்களின் உறவினர்கள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர்.
இன்று மாலை கிறிஸ்தவ மத தலைவர்கள் கலந்து கொண்டு உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்த காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கு நீர் ஆகாரத்தை வழங்கி போராட்டத்தை நிறைவுக்கு கொண்டுவந்துள்ளனர்.
இதேவேளை, குறித்த கோரிக்கைகளை வலியுறுத்தி வல்வெட்டித்துறை பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் சதீஸ் தலமையிலான குழுவினர், முள்ளிவாய்க்காலிருந்து தொடங்கிய நடை பயணம் இன்றைய தினம் யாழ்.வந்து நிறைவு செய்துள்ளது.
இந்த நடை பயணத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் முழுமையான ஆதரவினை தெரிவித்திருந்தனர்.
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 08-03-2015, 05:16.37 PM ]
கிளிநொச்சியை பிறப்பிடமாகவும், வவுனியா கற்பகபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெஸ்ரின் மனோகரன் ஜெயக்குமார் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
[ Sunday, 08-03-2015, 04:53.45 PM ]
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குப்பட்ட மாவடிவேம்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளாதாக பொலிசார் தெரிவித்தனர்.
[ Sunday, 08-03-2015, 04:40.12 PM ]
இலங்கைக்கான தமது விஜயம் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமது டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார்.
[ Sunday, 08-03-2015, 04:25.20 PM ]
இலங்கையில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க உதவினார் என்ற குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கிளிநொச்சியை சேர்ந்த ஜெயக்குமாரி பாலேந்திரன் அடுத்த வாரத்தில் விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
[ Sunday, 08-03-2015, 04:17.36 PM ]
சாய்ந்தமருது மக்கள் எதிர்நோக்கி வருகின்ற நிலப் பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு கரைவாகு வயல் பகுதியில் ஒரு தொகுதி காணியை நிரப்புவதற்காக தான் மேற்கொண்டு வருகின்ற முயற்சிகள் வெற்றியளிக்கும் கட்டத்திற்கு வந்திருப்பதாக..
[ Sunday, 08-03-2015 17:09:01 GMT ]
பஹாமாஸ் நாட்டில் உள்ள பள்ளி ஒன்றில் தனது கருப்பு நிறத்தை பார்த்து கிண்டலடித்தவர்களுக்கு மாணவி ஒருவர் தக்க பதில் அளித்துள்ளார்.
[ Sunday, 08-03-2015 15:14:58 GMT ]
உத்திரபிரதேச மாநிலத்தில் பாலியல் பலாத்காரத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற பெண் உயிருடன் எரிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Sunday, 08-03-2015 13:31:52 GMT ]
இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சங்கக்காரா, சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் வயலின் திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.
[ Sunday, 08-03-2015 13:48:54 GMT ]
கடல் வகை உணவுகள் என்றாலே அனைவருக்கும் நாவில் எச்சில் ஊறும்.
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 08-03-2015 07:04:14 ]
முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயக கட்சியின் தலைவருமான ஜெனரல் சரத் பொன்சேகாவைச் சுற்றிச் சர்ச்சைகள் தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கின்றன.

ad

ad