நாட்டின் தற்போதைய அரசாங்கம் வடக்கு, கிழக்கு மக்களின் அவநம்பிக்கையை போக்கி அவர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளதாக அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
வடமத்திய மாகாண அரச ஊழியர்களுடன் அண்மையில் நடந்த சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டின் இன்றைய அரசாங்கம் குறித்து வெளிநாட்டவர்கள் கூட ஆச்சரியம் அடைந்துள்ளனர் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சியின் கீழ் வீணாக பணத்தை செலவிட வேண்டாம் என அரச ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ள அமைச்சர், அரச ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் கலந்துரையாடியுள்ளார்.