புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஏப்., 2015

நள்ளிரவு 12 மணிக்கு பொதுமகனின் வீட்டுக்குள் புகுந்த சிப்பாய்: முல்லைத்தீவில் சம்பவம்


முல்லைத்தீவு மாவட்டம் உடையார்கட்டு பகுதியில் நேற்றைய தினம் பொதுமகன் ஒருவரின் வீட்டுக்குள் நள்ளிரவு 12 மணிக்கு புகுந்த படைச் சிப்பாயை அப்பகுதி மக்கள் விரட்டியத்த சம்பவம் ஒன்ற இடம் பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
உடையார்கட்டு தேராவில் பகுதியில் நேற்றைய தினம் நள்ளிரவு 12மணியளவில் படைச்சிப்பாய் ஒருவர் இப்பகுதியில் உள்ள பொதுமகன் ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
குறித்த சிப்பாய் வீட்டுக்குள் நுழைவதை வீட்டிலிருந்தவர்கள் பார்த்துவிட்டு கூச்சலிட்டதையடுத்து அயலவர்கள் அப்பகுதியில் கூடி படைச்சிப்பாயை துரத்தியுள்ளனர்.
இந்நிலையில் ஓடிய படைச்சிப்பாய் அருகிலுள்ள படைமுகாமிற்குள் சென்றுள்ளான். குறித்த படைச்சிப்பாய் ஓடி வருவதைப் பார்த்து படைமுகாமில் காவலில் நின்ற சிப்பாய் முகாமின் பிரதான வாயிலை திறந்து சிப்பாயை உள்ளளே விட்டுள்ளான்.
இதனையடுத்து மக்கள் முகாமிற்குள் செல்ல முடியாத நிலையில் திரும்பியுள்ளனர்.
எனினும் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு விடயத்தை தெரியப்படுத்தியதையடுத்து, பொலிஸார் நேற்றைய தினமே அப்பகுதிக்குச் சென்று விசாரணைகள் நடத்தியுள்ளதுடன், குறித்த பொதுமகனை இன்றைய தினம் காலை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறும் அழைத்துள்ளனர்.
இன்றைய தினம் காலை குறித்த வீட்டாருக்கு அழைப்பினை எடுத்த பொலிஸார் விசாரணைக்கு வரவேண்டாம். படையினருடன் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளனர்.
இதனையடுத்து குறித்த வீட்டுக்கு வந்த படையினர், சிப்பாய் வீட்டுக்குள் வந்தது உண்மைதான் ஆனால் அந்த சிப்பாய் யார் என்பது தெரியவில்லை. வாயிலில் காவலுக்கு நின்ற சிப்பாயும் உண்மையை சொல்ல மறுக்கின்றான். எனவே சமாதானமாக போங்கள் என கேட்டுள்ளனர்.
ஆனால் சமாதானத்திற்கு மக்கள் முழுமையான மறுப்பினை தெரிவித்துள்ளனர்.

ad

ad