புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஏப்., 2015

இரண்டு பஸ்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் 18 பேர் படுகாயம்


யாழ்.நாவாற்குழி சந்தியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
மேற்படி விபத்து குறித்து தெரிய வருவது,
 
நாவற்குழி சந்தியில் பாடசாலை மாணவர்களை ஏற்றுவதற்காக காத்திருந்த பஸ் மீது, மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த பஸ் பின்பக்கமாக மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
 
குறித்த விபத்தில் படுகாயமடைந்த 16 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையிலும் 2 பேர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 16 பேரில் இருவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுவதுடன், அவர்களில் ஒருவர் பாடசாலை மாணவர் ஆவார்.
 
மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ad

ad