புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஏப்., 2015

மாடல் அழகி பாலியல் பலாத்காரம்: 3 போலீசார் உள்பட 6 பேர் கைது!


மாடல் அழகியை பாலியல் பலாத்காரம் செய்த 3 போலீசார் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


மும்பை அந்தேரி பகுதியை சேர்ந்த 25 வயது மாடல் அழகி ஒருவரை கடந்த 21 ஆம் தேதி செல்போனில் ஒருவர் தொடர்பு கொண்டு, தான் அந்தேரியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருப்பதாகவும், உடனடியாக உங்களை சந்திக்க வேண்டும் என்றும் கூறி இருக்கிறார். இதை நம்பி அந்த மாடல் அழகி அந்த ஓட்டலுக்கு சென்றிருக்கிறார். அங்கு, அந்த நபருடன் மாடல் அழகி பேசி கொண்டிருந்துள்ளனர்.

அப்போது, திடீரென காக்கிநாக்கா போலீஸ் நிலையத்தை சேர்ந்த உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கதாபே, சூரியவன்சி மற்றும் போலீஸ்காரர் கோட்டே ஆகியோர் அந்த அறைக்குள் நுழைந்து மாடல் அழகியை, விபச்சார வழக்கில் கைது செய்துவிடுவோம் என்று மிரட்டி உள்ளனர். மேலும், மாடல் அழகியிடம் இருந்து நகை, பணத்தை அபகரித்த போலீஸ்காரர்கள், அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

உடனே அந்த பெண், ஓட்டல் அறையின் கழிவறைக்கு சென்று தனது செல்போன் மூலம் போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியாவுக்கு குறுந்தகவல் அனுப்பி இருக்கிறார். இதை அடுத்து, ராகேஷ் மரியாவின் செல்போனில் இருந்து சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்களுக்கு அழைப்பு வந்திருக்கிறது. உடனே அவர்கள் பதறி அடித்து கொண்டு சம்பவ இடத்தைவிட்டு ஓட்டம் பிடித்து உள்ளனர்.

மறுநாள் அந்த பெண், கமிஷனர் ராகேஷ் மரியாவை சந்தித்து  நடந்த சம்பவத்தை விளக்கி இருக்கிறார். அதன் பின்னர், ராகேஷ் மரியா உத்தரவின்பேரில் அந்தேரி எம்.ஐ.டி.சி. போலீசார் வழக்கு பதிவு செய்து, போலீசார் கதாபே, சூரியவன்சி, கோட்டே மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த 45 வயது பெண் உள்பட 6 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ad

ad