புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஏப்., 2015

தண்ணீர் கூட வழங்காமல் 3 நாட்கள் பெண் பலாத்காரம்: கொடூர கும்பல் கைது


 ஹரியானா மாநிலம் குர்கோனில், மேற்கு வங்க மாநில பெண்ணை கடத்தி சென்ற ஒரு கும்பல், உணவு கூட தராமல்
அவரை 3 நாட்கள் அடைத்து வைத்து மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கொடூர சம்பவம் குறித்து அந்த 32 வயதான பெண் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், ''குர்கோனில் உள்ள டி.எல்.எப். பேஸ் 5 குடியிருப்பில், மேற்கு வங்காளத்தை சேர்ந்த நான் வசித்து வருகிறேன். அந்தப் பகுதியில் நான் வீட்டு வேலை செய்து வருகிறேன். கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி இரவு 11 மணியளவில் எனது வீட்டின் கதவை தட்டிய தலீப் என்கிற பாபு, ரூப் சந்த், விகாஸ், மோர்சிம் மற்றும் அகில் ஆகிய 5 பேர் கொண்ட கும்பல், எனது கை, கால்களை கட்டி ஆட்டோவில் கடத்தி சென்றனர்.

அங்கிருந்து சுமார் 50 கி.மீ. தூரத்தில் உள்ள வாசிராபாத்திற்கு ஆட்டோவில் கடத்தி சென்ற அந்த கும்பல் அங்குள்ள ஒரு வீட்டில் என்னை அடைத்து வைத்து 5 பேரும் என்னை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்தனர்.

வலி தாங்க முடியாமல் நான் துடித்து குடிக்க தண்ணீர் கேட்டபோது கூட அவர்கள் தண்ணீர் கொடுக்கவில்லை. மேலும், மூன்று நாட்களும் அவர்கள் எனக்கு குடிக்க தண்ணீர், உணவு கூட கொடுக்காமல் அடித்து துன்புறுத்தி தொடர்ந்து மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்தனர். அவர்கள் வெளியே சென்றிருந்தபோது போலீசார் என்னை அங்கிருந்து மீட்டனர்" என்று கூறி இருக்கிறார்.

இது குறித்து குர்கோன் துணை காவல் ஆணையர் கூறும்போது, ''வாசிராபாத் பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட வீட்டில் இப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தொலைபேசி மூலம் எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து உடனடியாக குறிப்பிட்ட அந்த வீட்டிற்கு சென்று போலீசார் பார்த்தபோது, அந்த வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்துள்ளது. அப்போது, அந்த வீட்டில் இருந்து ஒரு பெண்ணின் முனகல் சத்தம் கேட்டிருக்கிறது.

உடனே அந்த வீட்டின் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்ற போலீசார், அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். மேலும் இந்த குற்றச் செயலில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட கும்பல் அந்த பகுதியில் மறைந்திருந்தபோது போலீசார் அவர்களை பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றார்.

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அந்தப்பெண், அல்தாப் என்ற நபருக்கு 1 லட்ச ரூபாய் கடன் கொடுத்துள்ளார். கொடுத்த பணத்தை அப்பெண் திருப்பி தரும்படி பலமுறை கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இந்நிலையில், அப்பகுதியில் ரவுடியாக சுற்றி வந்தவனும், ஏற்கனவே பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டவனுமான தலீப்பை சந்தித்த அல்தாப், இந்த விஷயத்தை கூறி அந்தப் பெண்ணுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று சொல்லி இருக்கிறான்.

அதை தொடர்ந்தே தனது கூட்டாளிகள் நால்வருடன் சேர்ந்து அப்பெண்ணை கடத்தி சென்ற தலிப், உணவு கூட வழங்காமல் 3 நாட்கள் அடைத்து வைத்து மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் என்று அப்பகுதி வாசிகள் கூறுகின்றனர்.

இந்த கொடூர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ad

ad