புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஏப்., 2015

5ம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் ஜனாதிபதி மைத்திரிபால

மே 5ம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைப்பார் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் முறையில் மாற்றம் செய்ய முடியாது போனாலும் ஜனாதிபதி கட்டாயம் நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தல் அறிவிப்பை வெளியிடுவார் என அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் எதிர்வரும் 9ம் மற்றும் 10ம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதனை தவிர தகவல் அறியும் சட்டம் மற்றும் கணக்காய்வு சட்டமூலம் என்பன 22ம் 23ம் திகதிகளில் விவாதத்திற்கு எடுக்கப்படவுள்ளது.
அத்துடன் இன, மத மற்றும் ஜாதி வாத பகையுணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடப்படுவதை தடை செய்யும் சட்டமூலம் குற்றவியல் சட்டத்தில் சேர்க்கப்படவுள்ளது.
இதனையடுத்து எதிர்வரும் வெசாக் பௌர்ணமி உற்சவம் முடிவடைந்த பின்னர், நாடாளுமன்றத்தை கலைத்து, தற்போது நடைமுறையில் உள்ள விகிதாசார அடிப்படையில் தேர்தல் நடத்தப்படும் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

ad

ad