புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஏப்., 2015

மகிந்தவிற்காக 5000 பிக்குமார் நடை பவனி


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது கட்சிகாரர்களுக்கு எதிராக மேற்கொள்ளும் பழிவாங்கலை உடனடியாக நிறுத்துமாறு கோரி புத்த துறவிகள் நடை பவனி செல்ல தீர்மானித்துள்ளார்கள்.
புத்த துறவிகள் 5000ற்கும் அதிகமானோர் கலந்து கொள்ளும் நடை பவனி ஒன்றினை நடத்துவதற்கு தேசிய புத்த துறவிகள் சங்கம் ஆயத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை இவ் நடை பவனி மேற்கொள்ளவுள்ளதாக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நல்லாட்சியில் பழிவாங்கள் இடம் பெற கூடாது. எனினும் தொடரந்து பழிவாங்கள் இடம் பெற்றக்கொண்டே உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாபதிபதி மகிந்த ராஜபகச்விற்கு வாக்களித்த 58 லட்ச மக்கள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வந்து அறிக்கை ஒன்று வழங்குவதற்கு சந்தர்ப்பம் ஒன்று ஏற்படுத்தி தருமாறு இலஞ்ச ஊழல் ஆணைகுழுவிடம் தேசிய புத்த துறவிகள் சங்கம் விசேட வேண்டுக்கோள் ஒன்றினை முன்வைப்பதாகவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்

ad

ad