புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மே, 2015

7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று 30-வது ஆட்டமாக கொல்கத்தா ஏடன் கார்டன்ஸில் நடந்த ஆட்டத்தில் சென்னை
சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின. அதில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய சென்னை அணியில் மெக்கல்லம் (32) பிராவோ (30) நெகி (27) ஜடேஜா (24) பிளெஸ்ஸிஸ் (20) ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்களை எடுத்தது சென்னை அணி. கொல்கத்தா அணி தரப்பில் ஹாக் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரஸல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியில் உத்தப்பா 80 ரன்களை குவித்தார். ரஸல் 55 ரன்களை குவித்து அணியை வெற்றிப்பாதைக்கு திருப்பினார். 19.5 ஓவர்களின் முடிவில் 169 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது கொல்கத்தா அணி

ad

ad