புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஏப்., 2015

85 பராளுமன்ற உறுப்பினர்கள் 19குறித்து முடிவெடுக்கவில்லை: ரி.பி.ஏக்கநாயக்
19வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவு வழங்குவதா, இல்லையா என்பது தொடர்பில் ஸ்ரீ.சு.கட்சியின் 85 பாராளுமன்ற உறுப்பினர்கள்
தீர்மானங்கள் எதுவும் மேற்கொள்ளவில்லை.
இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவிற்கு ஆதரவு வழங்கி வரும் குழுவை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ரி.பி. ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற போது அக்கட்சி 19 வது அரசியலமைப்பிற்கு ஆதரவு வழங்குவதாக தீர்மானம் மேற்கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இதனால் 19வது அரசியலமைப்பிற்கு ஆதரவு வழங்குபவர்கள் அது நிறைவேறும் என நிம்மதி பெருமூச்சுவிட்டு வருகின்றனர்.
இந்நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு தெரிவிக்கும் குழுவினர் இதுவரை எவ்வித தீர்மானங்களும் எட்டப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

ad

ad