புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஏப்., 2015

முதல் இடம்பிடித்த சென்னை: 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி

பஞ்சாப் அணிக்கெதிரான இன்றைய ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

8வது ஐ.பி.எல் தொடரின் 24வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துடுப்பெடுத்தாடியது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய டுவைன் ஸ்மித் 26 ஓட்டங்களும், பிரண்டன் மெக்கல்லம் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் கடந்து 66 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிங்கிய ரெய்னா 29 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். தொடந்து களமிறங்கிய அணித்தலைவர் டோனி ஆட்டமிழக்காமல் 41 ஓட்டங்களும், ஜடேஜா 18 ஓட்டங்களும் எடுத்தனர்.
20 ஓவர் முடிவில் சென்னை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 192 ஓட்டங்கள் குவித்தது.
இதனையடுத்து 193 ஓட்டங்கள் என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 95 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியைத் தழுவியது.
பந்துவீச்சில் சென்னை சார்பில் ஜடேஜா 3 விக்கெட்டும், நெக்ரா, அஸ்வின் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி ஓட்டவிகித அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.
ஆட்டநாயகனாக சென்னை அணியின் மெக்கல்லம் தெரிவானார்.

ad

ad