லண்டனில் வரும் மே மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில், “யோகி” எனும் ஈழத் தமிழ்மகனை ஆதரித்து வெற்றி பெறச் செய்வோம்..!!
லண்டனில் வரும் மே மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில், தேசிய விடுதலை கட்சியில் (National Liberal Party) திரு. சொக்கலிங்கம் யோகலிங்கம் என்னும் ஈழத் தமிழ்மகன்
லண்டன் Pinner, Northwood and Ruislip பகுதியில் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிட உள்ளார். Pinner, Northwood and Ruilisp மட்டும் சுமார் 2,500 ஈழத் தமிழர்கள் செறிவாக வாழ்கிறார்கள்.
இவர்கள் அனைவரது வாக்குகளும் திரு. சொக்கலிங்கம் யோகலிங்கத்துக்கு செல்ல வேண்டும்; அப்படி என்றால் தான் நாம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தேர்தலில் தமிழ் மகன் ஒருவரை முதன்முறையாக பிரித்தானிய பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்த முடியும்.
கனடாவில் தமிழர்கள் எவ்வாறு இணைந்து ராதிகா சிற்சபேசனை MP ஆக்கினார்களோ, அதுபோல லண்டன் தமிழர்கள் நினைத்தால் திரு.சொக்கலிங்கம் யோகலிங்கத்தை வெற்றி பெறச் செய்யலாம். இதனூடாக எமது அரசியல் காய்நகர்த்தல்களை மேற்கொள்வது மிகவும் இலகுவாக இருக்கும்.
சொக்கலிங்கம் யோகலிங்கம் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டம் ஒன்று கடைசியாய் Northwood நடைபெற்றுள்ளது.
நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கெண்டு உரையாற்றிய யோகலிங்கம் அவர்கள், “இலங்கையில் சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்று தேவை என்றும், அதனை சர்வதேசம் நடத்த தானும், தனது கட்சியும் கடும் அழுத்தத்தை கொடுப்போம்” என்றும் தெரிவித்தார்.
2009ம் ஆண்டு லேபர் கட்சி ஆட்சியில் இருந்தவேளை, இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தது பலருக்கு நினைவிருக்கலாம்.
இத்தீர்மானத்தை சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரித்தது. நேஷனல் லிபரல் கட்சி பிரித்தானியாவில் தமிழர்களோடு நீண்டகால உறவில் உள்ள ஒரு கட்சியாகும்.
எனவே வரும் மே மாத தேர்தலில் தமிழர்கள் நிச்சயம் தமது வாக்குகளை திரு. சொக்கலிங்கம் யோகலிங்கம் அவர்களுக்கும், அவர் சார்ந்த கட்சியான நேஷனல் லிபரல் கட்சிக்கும் இடுவார்கள் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்…
“எஸ்.வை” -லண்டன்.
“எஸ்.வை” -லண்டன்.