புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஏப்., 2015

விஜயகாந்த் சந்திப்பு கூட்டணிக்கான அச்சாரமா? கலைஞர் பதில்!


திமுக தலைவர் கலைஞர் இன்று (திங்கள்) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,

கேள்வி :- நேற்றையதினம் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உங்களைச் சந்தித்ததை, கூட்டணிக்கான ஒரு அச்சாரமாக எடுத்துக் கொள்ளலாமா?

கலைஞர் :- அது ஒவ்வொருவரும் தங்களுக்குள் எடுத்துக்கொள்வதைப் பொறுத்தது. எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் இப்போதே அதுபற்றி முன் கூட்டியே எதுவும் சொல்வதற்கில்லை. ஆனால் இப்போது தமிழ்நாடு உள்ள நிலையில் கூட்டணி தேவை என்பதையும், அந்தக் கூட்டணியின் வெற்றி ஒன்று தான் தமிழ்நாட்டைக் காப்பாற்றும் என்பதையும் தான் நான் எடுத்துக் கூற விரும்புகிறேன்.

கேள்வி :- நேற்றையதினம் விஜயகாந்த் எடுத்த முயற்சியை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

கலைஞர் :- ஜனநாயகத்தில் தமிழ்நாட்டு மக்களை ஒன்று திரட்டுகின்ற முயற்சியை தம்பி விஜயகாந்த் எடுத்துக் கொண்டதற்காக நான் அவரைப் பாராட்டுகிறேன். அப்படிப் பாராட்டுவதற்கு அடையாளமாகத் தான் திராவிட முன்னேற்றக் கழகமும் அவருடைய முயற்சிக்கு எல்லா வகையான ஆதரவையும் தரத் தயாராக இருக்கிறது என்பதைச் சொல்ல விரும்புகிறேன் இவ்வாறு கூறியுள்ளார். 

ad

ad