புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஏப்., 2015

சோனியா குறித்த சர்ச்சை கருத்து: புதுச்சேரியில் பாஜக அலுவலகம் மீது தாக்குதல்!




காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா குறித்து மத்திய அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில்
பாஜக அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி சிவப்பாக இருப்பதால்தான் அவர் காங்கிரஸ் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டார் என்றும், நைஜீரிய நாட்டை சேர்ந்தவராக இருந்தால் அவரை இந்த அளவுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் ஏற்றுக் கொண்டிருந்திருப்பார்களா? என்றும் மத்திய அமைச்சர் கிரிராஜ் சில தினங்களுக்கு முன் பேசினார். அவரது பேச்சுக்கு நாடெங்கும் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
இந்நிலையில் புதுச்சேரியில் இன்று பிற்பகல், மத்திய அமைச்சர் கிரிராஜ்க்கு எதிராக கோஷம் எழுப்பியபடியே, நூறடி சாலையில் இருக்கும் பாஜக அலுவலகத்தை, இளைஞர் காங்கிரசை சேர்ந்தவர்கள்  முற்றுகையிட்டனர். அப்போது பாஜக அலுவலகத்தை அடித்து, உடைத்தனர்.
இதையடுத்து ஆத்திரம் அடைந்த பாஜகவினர், புதுச்சேரி முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்கள் அலுவலகத்தை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினர்.
தொடர்ந்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருப்பதால் புதுச்சேரியில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

ad

ad