புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஏப்., 2015

நாடாளுமன்றத்தில் பிறந்தநாள் கொண்டாடும் பசில்
நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் தனது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். அதற்கான விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் பசில் ராஜபக்ச முதல் முறையாக இன்று நாடாளுமன்ற கூட்டத்தி்ல் கலந்து கொள்கிறார்.
திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பசில் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிந்தவுடன் உடனடியாக அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்ற அவர், கடந்த 21 ஆம் திகதி இலங்கை திரும்பினார்.
நாடு திரும்பிய பசில், நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு வாக்குமூலம் வழங்குவதற்காக சென்ற நிலையில் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்ட பசில், திடீர் சுகவீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறை அதிகாரிகள் அவரை இன்று நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரவுள்ளனர்

ad

ad