புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஏப்., 2015

தப்பியது சீனாவின் ஷங்காய் நகருக்குப் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பயணிகள் விமானம்,


சீனாவின் ஷங்காய் நகருக்குப் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பயணிகள் விமானம், தொழில்நுட்பக் கோளாறினால் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
தரையிறக்கப்பட்ட விமானத்தில் இருந்த பயணிகளை வேறொரு விமானம் மூலம் அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமைநேர பொது முகாமையாளரிடம் இது தொடர்பாக வினவிய போது, பிற்பகல் 02.10க்கு புறப்பட்ட விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 02 மணித்தியாலங்களின் பின்னர், 04.55 அளவில் தரையிறக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

ad

ad