புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஏப்., 2015

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு உரிமை கோருகிறது தமிழரசுக் கட்சி! - சம்பந்தன், துரைராஜசிங்கம் கையெழுத்திட்டு சபாநாயகருக்குக் கடிதம் 
நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் யார்
என்ற சர்ச்சை சூடு பிடித்துள்ள நிலையில், தேர்தல் சட்டம் மற்றும் நாடாளுமன்ற விதிமுறைகளுக்கமைய எதிர்க்கட்சித் தலைவர் பதவி இலங்கை தமிழரசுக் கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷவுக்கு அக்கட்சி நேற்றுக் கடிதம் அனுப்பியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி பொதுச் செயலாளர் கே.துரைராஜசிங்கம் ஆகியோர் கையொப்பமிட்டு சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-
"2010 ஏப்ரல் பொதுத் தேர்தல் முடிவில் நாடாளுமன்றுக்கு பதிவுசெய்யப்பட்ட நான்கு கட்சிகளின் பிரதிநிதிகள் மாத்திரமே தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாடாளுமன்றுக்கு அறிவித்திருந்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தேசிய முன்னணி ஆகியனவே அக்கட்சிகள் எனத் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்திருந்தார்.
அதன்படி, அதிக ஆசனம் பெற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைக்க அடுத்தபடியாக அதிக ஆசனம் பெற்று ஐக்கிய தேசியக் கட்சி எதிர்க்கட்சியாகத் தெரிவானது.
இந்நிலையில், 2015 ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில் பின் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரதமர் நியமிக்கப்பட்டு ஐ.தே.க. அமைச்சரவை ஏற்படுத்தப்பட்டது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராகவும் அமைச்சரவையின் தலைவராகவும் ஜனாதிபதி திகழ்கின்றார்.
இந்த அரசில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சுப் பதவி பெற்றுள்ளனர்.
மேலும் 7 ஆசனங்களைக்கொண்ட ஜனநாயக தேசிய முன்னணியின் ஓர் உறுப்பினரும் அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளார்.
அதனடிப்படையில் பார்க்கும்போது தற்போது நாடாளுமன்றில் 14 ஆசனங்களைக்கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியே எதிர்க்கட்சியாக இருக்கத் தகுதியுடையது. எனவே, இது தொடர்பில் தாங்கள் கவனம் செலுத்தவேண்டும்'' - என்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷ­வுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி குறிப்பிட்டுள்ளது

ad

ad