புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஏப்., 2015

துறைமுக அதிகாரசபையின் வங்கிக்கணக்கா புஸ்பா ராஜபக்ச தொடர்பான வங்கிக்கணக்கு- சோதனையிட உத்தரவு


முன்னாள் அமை ச்சர் பசில் ராஜபக்சவின் மனைவியான புஸ்பா ராஜபக்சவின் நிதியம் தொடர்பான வங்கிக் கணக்குகளை சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இரண்டு அரச வங்கிகள் மற்றும் ஒரு தனியார் வங்கிக்கு இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.

மோசடி தவிர்ப்பு பொலிஸ் பிரிவின் விசாரணையின்படி, பொய்யான தகவல்களின் அடிப்படையில் புஸ்பா ராஜபக்சவின் நிதியத்துக்கு வங்கிக்கணக்கு ஒன்று பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.
எனினும் இது உண்மையில் இலங்கை துறைமுக அதிகாரசபையின் வங்கிக்கணக்காகும்.
புஸ்பா ராஜபக்சவின் அரசசார்பற்ற நிதியம் 2010ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்டது.

ad

ad