புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஏப்., 2015

லண்டனில் எஸ்.பி.பி.யுடன் பாடிய 'சூப்பர்சிங்கர்' ஜெஸ்சிக்கா


விஜய் டிவி நடத்திய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இரண்டாவது இடம் பிடித்த ஈழத்தை சேர்ந்த மாணவி லண்டனில் நடந்த இசை நிகழ்ச்சியில் புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துடன் இணைந்து பாடினார்.

கடந்த இரு மாதங்களுக்கு முன் விஜய் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கனடாவை சேர்ந்த ஈழத்து மாணவி ஜெஸ்சிக்கா இரண்டாவது இடம் பிடித்து அசத்தினார்.
இந்த நிகழ்ச்சிக்காக அவருக்கு வழங்கப்பட்ட ஒரு கிலோ தங்கத்தை ஈழம் மற்றும் தமிழகத்தை சேர்ந்த குழந்தைகள் நலனுக்காக வழங்கி
அனைவர் மனதிலும் இடம் பிடித்தார்.
சிறந்த பாடகியாக வலம் வரவேண்டும் என்ற கனவு கொண்ட ஜெஸ்சிக்கா, லண்டனில் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துடன் இணைந்து பாடும் வாய்ப்பை பெற்றார். 

நேற்று இரவு லண்டனில் நடந்த இந்த இசை நிகழ்ச்சி குறித்து ஜெசிக்கா கூறுகையில், ''எஸ். பி. பி சாருடன் ஒரே மேடயில் இணைந்து பாடியது அற்புதமாக அனுபவமாக அமைந்தது.
எனது இசைப்பயணத்தில் இது மறக்க முடியாத நிகழ்வு'' என்று குறிப்பிட்டுள்ளார்.

ad

ad