புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மே, 2015

இங்கிலாந்தில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில் இன்போசிஸ் நிறுவனத்தின் நாராயணமூர்த்தி மருமகன் ரிஷி சுனாக் உள்ளிட்ட 10 இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றுள்

இங்கிலாந்தில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில் இன்போசிஸ் நிறுவனத்தின் நாராயணமூர்த்தி மருமகன் ரிஷி சுனாக் உள்ளிட்ட 10 இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றுள்ளனர்.

இங்கிலாந்தின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹாக் போட்டியிட்ட, வடக்கு யார்க்ஷையர் பகுதியில் உள்ள ரிச்மண்ட் தொகுதியில் சுனாக் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் நாராயணமூர்த்தியின் மகள் அக்ஷாடாவை திருமணம் செய்துள்ள சுனாக், விஜ்செஸ்டர் கல்லூரி, ஆக்ஸ்போர்டு மற்றும் ஸ்டாண்போர்டு பல்கலையில் படித்துள்ளார். வெற்றி பெற்றால் சிறு மற்றும் குறு உள்ளூர் தொழிலுக்கு ஊக்கமளிக்க முயற்சி செய்வேன் என சுனாக் தேர்தலுக்கு முன்னர் கூறியிருந்தார். சுனாக், 1 பில்லியன் பவுன்ட் மதிப்பிலான சர்வதேச நிறுவனத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவராகவும், இங்கிலாந்தில் பல தொழில்களிலும் முதலீடு செய்துள்ளார். இங்கிலாந்தில் நடந்த தேர்தலில் 50 இந்திய வம்சாவளியினர் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் லீசெஸ்டர் கிழக்கு தொகுதியில் கெய்த் வாஜ், வாலரி வாஜ்(வால்சால் தெற்கு), விரேந்திர சர்மா( இயலிங் சவுத்தால்) சீமா மல்கோத்ரா(பெல்தாம் ஹூஸ்டன்), லிசா நந்தி(விகான்), சாஜித் ஜாவித்(புரும்ஸ்குரோவ்), பிரிதி படேல்(விதாம்), அலோக் சர்மா( ரீடிங் மேற்கு) மற்றும் சைலேஷ் வாரா( கேம்பிரிஜெஷிர் வடமேற்கு) ஆகிய இந்திய வம்சாவளியினரும் வெற்றி பெற்றுள்ளனர். 

கடந்த முறை கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் எம்.பி.,யாக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த பால் உப்பல் வோல்வோர்ஹாம்ப்டன் தென் மேற்கு தொகுதியில், இந்த முறை தோல்வியடைந்தார். 

கேமரூன் மீண்டும் பிரதமர்:


இங்கிலாந்தில் நடந்த பார்லிமென்ட் தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதன்படி, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 330 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தொழிலாளர் கட்சி 232 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஸ்காட்டிஸ் தேசிய கட்சி 56 இடங்களிலும், லிபரெல் ஜனநாயக கட்சி 8 தொகுதிகளிலும், இங்கிலாந்து சுதந்திர கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் டேவிட் கேமரூன், மெஜாரிட்டி ஆட்சி அமைப்போம் என கூறினார்.

ad

ad