புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மே, 2015

வடக்கில் 3 அமைப்புகளுக்கு நீதிமன்றம் தடை


புங்குடுதீவு மாணவி படுகொலை விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்த வடக்கிலுள்ள மூன்று அமைப்புக்களுக்கு யாழ்.  
நீதவான் நீதிமன்றம் இன்று  தடை விதித்துள்ளது.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் டி.குமாரவேலு தலைமையிலான மக்கள் சக்தி அமைப்பு மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தலைமையிலான யாழ். பெண்கள் சக்தி ஆகிய அமைப்புகளுக்கே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
புங்குடுதீவு மாணவியின் படுகொலைச் சம்பவத்தை அடுத்து யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வகையிலேயே மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது

ad

ad