புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 மே, 2015

பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தல்: இதுவரையில் 623ஆசனங்களுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன


வெளியான தேர்தல் முடிவுகளின்படி 308 ஆசனங்களை பெற்று ஆளும் கன்சர்வேடிவ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. தொழில்கட்சி 227 ஆசனங்களைப் பெற்று இரண்டாம் நிலைக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
இதனைத் தவிர ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி 56 ஆசனங்களைப் கைப்பற்றி மூன்றாம் இடத்தைப் பெறுள்ளது.
தற்போதைய தேர்தல் முடிவுகளின் ஆளும் கொன்சவேட்டிவ் மற்றும் தொழில் கட்சிகளுக்கு இடையில் ஆசன எண்ணிக்கையில் வேறுபாடு சிறிதாக இருப்பினும்; இறுதித் தேர்தல் முடிவுகளின் பின்னர் பெரும்பான்மை வாக்குகளால் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரித்தானியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கன்சவேடிவ் கட்சி தனித்து ஆட்சி அமைப்பதற்குத் தேவையான ஆசனங்களை கைப்பற்றும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று இரவு வரை இம்முறை எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்களை கைப்பற்றாது என்றும், தொங்கு பாராளுமன்றமே அமையும் என்றும் கருத்துக் கணிப்புகள் வெளியாகியிருந்த நிலையில் அதற்கு முற்றிலும் மாறானதாக முடிவுகள் வெளியாகி வருகின்றன.
பிரதமர் டேவிட் கமரூன் தலைமையிலான கன்சவேடிவ் கட்சி இதுவரை வெளியான முடிவுகளுக்கு அமைய 308 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. அதேவேளை மேலும் 20 இடங்களில் கன்சவேடிவ் கட்சி முன்னிலையில் உள்ளது. இதற்கமைய கன்சவேடிவ் கட்சி 329 இடங்களை கைப்பற்றி தனித்து ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இறுதி முடிவு குறித்து கருத்துத் தெரிவிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் டேவிட் கமரூன், எவ்வாறாயினும் மீண்டும் கன்சவேடிவ் கட்சியே ஆட்சி அமைக்கும் என்பது உறுதி என்றும் கூறியுள்ளார்.
இதேவேளை பிரதான எதிர்கட்சியான தொழிற்கட்சி மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக ஸ்கொட்லாந்தில் தொழிற் கட்சி ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்பட்டுள்ளது. எஸ்.என்.பி என்றழைக்கப்படும் ஸ்கொட்லாந்து தேசிய கட்சி ஸ்கொட்லாந்தின் 59 தொகுதிகளில் 56 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
சுயாட்சி அதிகாரமுடைய ஸ்கொட்லாந்தை வலியுறுத்திவரும் ஸ்கொட்லாந்து தேசிய கட்சியின் இந்த மகத்தான வெற்றி பிரித்தானிய பாராளுமன்றத்தில் எதிர்வரும் நாட்களில் பாரிய திருப்பத்தை ஏற்படுத்தலாம் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நிலையில் ஆளும் கூட்டணி அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இருந்த லிபரல் ஜனநாயகக் கட்சி மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. லிபரல் ஜனநாயகக் கட்சியின் கோட்டைகளாக விளங்கிய பல தொகுதிகளில் அந்தக் கட்சி படு தோல்வியை சந்தித்துள்ளது.
ஈழத் தமிழர்களுக்கு மிகப் பரீட்சையமான லிபரல் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த எட் டேவியும் தோல்வியைத் தழுவியுள்ளார்.
இதனைத் தவிர தொழிற் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நிழல் நிதி அமைச்சர் எட் போல் தோல்வியடைந்துள்ளார்.
இதேவேளை கடும்போக்கு வலதுசாரிக் கட்சியான யு.கே.ஐ.பி என்ற பிரித்தானிய சுதந்திரக் கட்சி ஒரு இடத்தில் வெற்றிபெற்றுள்ளது. எனினும் அந்தக் கட்சியின் தலைவர் நைஜல் பராஜ் தோல்வியடைந்துள்ளார்.

ad

ad