புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மே, 2015

கிளிநொச்சி - சிவபுரம் பகுதியில் காமுகர்களின் பசிக்கு 7 வயது சிறுமி தீனி!

கிளிநொச்சி - சிவபுரம் பகுதியில் 7 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். சிறுமி வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளாரா? இல்லையா? என்பதை உறுதிப்படுத்தவென அவர் யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். 

கிளிநொச்சி - பரந்தன் - சிவபுரம் பகுதியில் 25ம் திகதி 7 வயது பாடசாலை மாணவி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் இரண்டிற்கும் மேற்பட்டவர்கள் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

புங்குடுதீவில் வித்தியா என்ற மாணவி கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி கொல்லப்பட்ட சம்பவம் நாட்டில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தி அதன்சூடு இன்னும் தனியாத நிலையில் கிளிநொச்சியில் சிறுமி ஒருவருக்கு இவ்வாறு நேர்ந்துள்ளதாக வௌியாகியுள்ள செய்தி பலரையும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது

ad

ad