புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 மே, 2015

நீதிமன்றத்தில் பசில் ராஜபக்ச - விளக்கமறியல் நீடிப்பு

 
நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச  சற்று முன்னர் கடுவல நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
திவிநெகும திணைக்களத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் நிதி மோசடித் தொடர்பில் கடந்த 22 ஆம் திகதி கடுவெல நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பசில்,இன்று வரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்தார். 
எனினும் சிறைச்சாலையில் ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அவருடன் கைது செய்யப்பட்ட திவிநெகும திணைக்களப் பணிப்பாளர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் ஆகியோரும் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளனர்.
பசிலுக்கு விளக்கமறியல் நீடிப்பு
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட மூவரை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ad

ad