புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மே, 2015

யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற சி.க.சிற்றம்பலம் எழுதிய தடம் பதித்த தமிழ் தேசியம் நூல் வெளியீட்டு விழா


பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் எழுதிய தடம் பதித்த தமிழ் தேசியம் நூல் வெளியீட்டு விழா இன்றைய தினம் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.
இன்றைய மாலை 3மணியளவில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து குறித்த நூல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாகாண அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன், தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாக கலந்து கொள்வர் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அமெரிக்க இராஜங்க செயலாளர் ஜோன் கெரியுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் மேற்படி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதனால் குறித்த தலைவர்கள் கலந்து கொள்ளாத நிலையில் இன்றைய தினம் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றிருந்தது.

ad

ad