புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மே, 2015

நைஜீரியாவில் கடத்தப்பட்ட இலங்கையர் விடுவிப்பு


நைஜீரியாவில் ஆயுததாரிகளால் கடத்திச் செல்லப்பட்ட இலங்கை பொறியியலாளர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதனை அவரின் குடும்ப உறுப்பினர்
ஒருவர் தெரிவித்ததாக இலங்கையின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
10வருடங்களாக நைஜீரியாவில் பணிபுரியும் டி.ஏ.கருணாதாஸ என்பவர் அண்மையில் கடத்திச் செல்லப்பட்டார். இதன்போது அவருக்கு பாதுகாப்புக்காக சென்ற பொலிஸ்காரர் கொல்லப்பட்டார்.
வாகன சாரதி துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானார். இந்தநிலையில் கருணாதாஸவை விடுவிக்க ஆயுததாரிகள் பெருந்தொகை பணத்தை கப்பமாக கோரியிருந்தனர்.
எனினும் அவரின் விடுவிப்புக்காக பணம் செலுத்தப்பட்டதா? என்ற விடயம் இன்னும் தெரியவரவில்லை.

ad

ad