புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 மே, 2015

பயங்கரவாதிகளுக்கு அஞ்சலி செலுத்த முடியாது: கரு ஜயசூரிய


நாட்டில் பயங்கரவாதிகளுக்காக அஞ்சலி செலுத்த முடியாது என பௌத்த சாசன அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
எனினும் போரில் உயிரிழந்த தங்களின் சொந்தங்களுக்காக அஞ்சலி செலுத்த வடக்கு மக்களுக்கு உரிமையுண்டு என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பாரியளவில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. இந்த விடயங்கள் குறித்து விரைவில் அறிக்கையொன்று வெளியிடப்படும்.
பதவிக் காலம் பூர்த்தியான உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் எவ்வாறான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ad

ad