புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மே, 2015

விசாரணைக்கென நாளை செல்லவிருக்கும் கோத்தபாய கைதாகலாம்


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை நாளை விசாரணைக்கு வருமாறு பொலிஸ் நிதி மோசடி தடுப்பு பிரிவு கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளது.
மிக் கொடுக்கல் வாங்கல் மற்றும் லங்கா வைத்தியசாலை பங்கு விற்பனை மோசடி தொடர்பில் விசாரணை நடத்தவென இவர் அழைக்கப்பட்டுள்ளார்.
அடுத்த வாரத்தில் கோத்தபாய கைதாகலாமென தகவல்கள் கசிந்த நிலையில் அதனை உறுதி செய்யும் விதமாக அவர் நாளை விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
இந்த விசாரணையைத் தொடர்ந்து அவர் கைதாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எவன்கார்ட் விவகாரமே அவர் மீதான பிரதான குற்றச்சாட்டாக உள்ள நிலையில் இந்த விடயம் பற்றி நாளைய விசாரணையில் கேள்விகள் கேட்கப்படாதென தெரிகிறது. இதனால் கைது விவகாரத்தை முழுமையாக உறுதி செய்ய முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ad

ad