புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 மே, 2015

மைத்திரி - மகிந்த சந்திப்பு! மனமுடைந்த சந்திரிக்கா


மகிந்தவிற்கும் ,மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் நடைபெறவுள்ள  சந்திப்பை நினைத்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மனமுடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நாளை சந்திக்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
குறித்த சந்திப்பின் காரணமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை வீட்டிற்கு அனுப்புவதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடக பேச்சாளர் டிலான் பெரேரா நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்திருந்ததனால் ஐக்கிய தேசிய கட்சியினர் பதற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் சில முக்கிய உறுப்பினர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இதேவேளை மைத்திரிபால சிறிசேனவை எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக நியமித்து ஜனாதிபதி ஆசனத்தில் அமர்த்துவதற்கு உதவி செய்தது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க என்பதும் குறிப்பிடத்தக்கது.

ad

ad