மகிந்தவிற்கும் ,மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் நடைபெறவுள்ள சந்திப்பை நினைத்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மனமுடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நாளை சந்திக்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
குறித்த சந்திப்பின் காரணமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை வீட்டிற்கு அனுப்புவதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடக பேச்சாளர் டிலான் பெரேரா நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்திருந்ததனால் ஐக்கிய தேசிய கட்சியினர் பதற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் சில முக்கிய உறுப்பினர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இதேவேளை மைத்திரிபால சிறிசேனவை எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக நியமித்து ஜனாதிபதி ஆசனத்தில் அமர்த்துவதற்கு உதவி செய்தது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க என்பதும் குறிப்பிடத்தக்கது.