புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மே, 2015

சென்னையில் நாளை விடுதலை சிறுத்தைகள் விருதுகள் வழங்கும் விழா

 
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டு தோறும் சான்றோர்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்களை பாராட்டி விருதுகள் வழங்கப்படுகின்றன. அம்பேத்கர் பிறந்த நாள் விழாவையொட்டி நடக்கும் இந்த விழா வெகு விமரிசையாக நடத்தப்படும்.

இந்த வருடம் விருதுகள் வழங்கும் விழா நாளை (2–ந் தேதி) மாலை சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெறுகிறது.

விழாவிற்கு கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தலைமை தாங்குகிறார். மாநில பொதுச் செயலாளர்கள் ரவிக்குமார், சிந்தனை செல்வன், மாநில பொருளாளர் முகம்மது யூசுப் உள்ளிட்ட மாநில முன்னணி நிர்வாகிகள் முன்னிலை வகிக்கின்றனர்.

இந்த ஆண்டு அம்பேத்கர் சுடர் விருது – எழுத்தாளர் அருந்ததி ராய்க்கும், அயோத்தி தாசர் ஆதவன் விருது– பேராசிரியர் க.நெடுஞ்செழியனுக்கும், பெரியார் ஒளி விருது– கோவை ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

காமராஜர் விருது – ஜி.கே.மூப்பனார் (மறைவுக்கு பின்னர் வழங்கும் முறையில்), காயிதே மில்லத் விருது – பேராசிரியர் ஜவாஹிருல்லா, செம்மொழி ஞாயிறு விருது –முனைவர் அவ்வை நடராஜன் ஆகியோருக்கு திருமாவளவன் வழங்குகிறார்.

மேலும் பொற்கிழியும் பண முடிப்பும் வழங்கி கவுரவிக்கப்படுகிறார்கள்.  விழாவில் விடுதலை சிறுத்தைகள் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கவுதமசன்னா, இளஞ்சேகுவேரா, வக்கீல் பார்வேந்தன், எஸ்.எஸ். பாலாஜி, இரா.செல்வம் உள்ளிட்ட திரளான தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள்.

ad

ad