ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு வழக்கில் திங்கள்கிழமை தீர்ப்பு அறிவிக்கப்படும் என்ற தகவல் கிடைத்ததும் அதிமுகவினர் பெங்களுருவை நோக்கி படையெடுக்க துவங்கினர். பெங்களுருவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதையடுத்து அதிமுகவினர் தமிழக எல்லையில் முகாமிட்டுள்ளனர்.
திங்கட்கிழமை காலை தீர்ப்பு வெளியாக இருப்பதால் கர்நாடகா, மற்றும் தமிழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.