புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மே, 2015

சாமியாருக்கு காணிக்கை ஆக்கிய மைனர் பெண்ணின் சித்தி, சித்தப்பா கைது


தானே டோம்பிவிலியில் குடும்ப மற்றும் தொழில் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாக கூறி பொதுமக்களை
ஏமாற்றி மைனர் பெண்களின் கன்னித்தன்மையை காணிக்கையாக கேட்டு 22 பேரை கற்பழித்த விஜய் தாம்பரே என்ற சாமியாரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கு அழைத்து வரப்பட்டிருந்த ஒரு மைனர் பெண்ணையும் போலீசார் மீட்டனர். விசாரணையில், அந்த பெண்ணின் கன்னித்தன்மையை சாமியாருக்கு காணிக்கை ஆக்குவதற்கு அவரது சித்தி மற்றும் சித்தப்பா அழைத்து வந்திருந்தது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் அந்த மைனர் பெண்ணின் சித்தி ஜானகி மற்றும் அவரது சித்தப்பா டோம்பிவிலி போலீசாரிடம் பிடிபட்டனர். இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், தங்களை செல்வந்தராக்குவதாக சாமியார் விஜய் தாம்பரே கூறியதால், தனது அக்காள் மகளை அவருக்கு காணிக்கை ஆக்க அழைத்து வந்ததாக தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ad

ad