புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மே, 2015

ஒட்டு மொத்த தமிழர்களுக்காகவும் போராடும் தமிழகத் தலைவர்களே உண்மையில் தமிழீழத்திற்காக நேர்மையாக போராடும் தலைவர்களாக உழைக்க முடியும்..செந்தமிழினி பிரபாகரன்

தமிழக அரசியல் கட்சிகள் பற்றிய என் பார்வை என்ன என சில உறவுகள் கேட்டவண்ணம் உள்ளீர்கள்.

நேர்மையான உண்மையான மனிதம் போற்றும் தமிழினத்தின் மீதும் ஒடுக்கப்படும் மக்களின் மீதும் உண்மையான பற்றும் அக்கறையும் உள்ள ஒவ்வொரு மனிதர்களையும் நான் நேசிக்கின்றேன். அவர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் உண்மையான நேர்மையான தோழர்களாக இருந்தால் தோழமையோடு எம் இனம் கை கோர்க்க வேண்டும் என்ற பார்வை எனக்குள் உண்டு.
அதே வேளை இந்திய தமிழினப்பகை ஆட்சிக் கட்டமைப்பின் கீழ் அடிமைப்பட்ட தமிழகத்தில் தேர்தல் அரசியல் மூலம் ஆட்சிக்கு வருவதன் மூலம் இன விடுதலையை வென்றெடுத்து விடலாம் என நினைக்கும் எவரும் எமக்கு விடுதலையை வென்றெடுத்து தருவார்கள் என நான் சிறிதும் நம்பவில்லை.
அதற்காக அவர்கள் தமிழ் உணர்வில் குறை கண்டு தவறு கூறவும் இல்லை.
எங்கெங்கு வாழ்ந்தாலும் எந்த கட்சியில் இருந்தாலும் எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே என இன உணர்வோடு உலகத் தமிழ் குடி உறவுகளாக வாழ்ந்து தமிழர் நலம் நாடும் ஒவ்வொரு தமிழரையும் எங்கள் தமிழினம் உறுதியாக நம்புகின்றது. நானும் உறுதியாக போற்றுகின்றேன்.
அடுத்து தமிழக தலைவர்கள் ஈழத் தமிழர்களில் கொண்டிருக்கும் அக்கறை அன்பு போல் இந்திய அரசிடம் அடிமைப்பட்டு இருக்கும் தமிழகத்திலும் அக்கறை கொண்டு இருப்பதே முதன்மை நேர்மையானது.
ஒட்டு மொத்த தமிழர்களுக்காகவும் போராடும் தமிழகத் தலைவர்களே உண்மையில் தமிழீழத்திற்காக நேர்மையாக போராடும் தலைவர்களாக உழைக்க முடியும்.
என் வீட்டில் நடக்கும் கொலைகளுக்கு நீதி கேட்காமல் போராடாமல் பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் என் சகோதரன் வீட்டில் நடக்கும் கொலைகளுக்காக குரல் கொடுத்து பயன் இல்லை. முதலில் எம் தமிழ் குடியை இரு வீட்டிலும் கொல்லும் எதிரிகளோடு போராட நாம் நேர்மையாக உண்மையாக துணிய வேண்டும். அது வரை எம் எந்த உழைப்பும் பயனற்றவையே.
ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்காகவும் உண்மையாக நேர்மையாக எவருக்கும் அடிபணியாமல் எந்த ஒரு சமரசமோ விலை போதலோ அரசியல் தில்லுமுல்லோ சாதிப்பிரிவினைகளோ இல்லாமல் உழைக்கும் ஒவ்வொரு தமிழர்களோடும் கை கோர்க்க எம் கரங்கள் துடிப்போடும் பாசத்தோடும் நீளும்.
தமிழர்காக குரல் கொடுக்கும் இனமான உண்மையான தமிழ் உறவுகள் மீது நாம் என்றும் நம்பிக்கை இழக்கவும் இல்லை. நாங்கள் உறுதியாக எங்கள் தமிழினத்தை நம்புகின்றோம்!
அதே போல் மனிதத்தை மதிக்கும் உண்மை மனிதர்களையும் அவர்கள் தமிழர்கள் அல்லாத போதும் உண்மையும் நேர்மையும் நன்மையையும் இருக்குமானால் மதிக்கின்றோம்!
விடுதலை வானில் பறக்க நினைக்கும் தமிழர்கள் நாங்கள்! நாங்கள் எந்தக் கொப்புகளையும் நம்பிக் காலூன்றுவதில்லை. எங்கள் இறக்கைகளை நம்பியே எங்கும் காலூன்றுவோம்!
எங்கள் இறக்கைகளாக இனமானத் தமிழர்களும் மனிதம் போற்றும் உலக மாந்தர்களும் மட்டுமே உள்ளார்கள்! எங்கள் முயற்சிகள் எங்கள் மூச்சுப்பைகளை நிறைத்து நிற்கும் வரையில் எங்கள் நம்பிக்கைகள் எங்கள் கால்களை நம்பியே பயணிக்கும்!
யாரும் பகை அல்ல எமக்கு குழி பறிக்கும் வரையில் யாரும் உறவல்ல எம் இனத்திற்காக உண்மையாக நேர்மையாக அயராமல் உழைக்கும் வரையில்.

ad

ad