புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மே, 2015

வித்தியாவிற்கு நடந்ததைப் போன்று இதன் பின்னர் யாருக்கும் நடக்கக் கூடாது: அரசியல்வாதிகள் - See more at: http://athavansrilanka.com/?p=237084#sthash.qWnn8NZx.dpuf

மாணவி வித்தியாவிற்கு ஏற்பட்டது போன்ற ஒரு கொடூரச் செயல் இதன் பின்னர் எந்தவொரு பெண்ணுக்கும் ஏற்படக்கூடாது என்று அரசியல்வாதிகள்
தெரிவித்துள்ளனர்.
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து இன்று (ஞாயிற்றுக்கிமை) மாலை கொழும்பு டொரின்டனில் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வு மற்றும் சத்தியாகிரகம் என்பனவற்றில் கலந்து கொண்டு உரையாற்றும்பொழுதே அரசியல்வாதிகள் இவ்வாறு தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி ஆகியோர் தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.
பாடசாலை மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாகவும், அந்த குற்றத்தை மேற்கொண்டவர்களுக்கு சட்டரீதியாக உயர்ந்தபட்ச தண்டனை வழங்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரித்தனர்.
அதேபோன்று இன, மத, அரசியல் பேதங்களை மறந்து அரசியல்வாதிகளும், மக்களும் இங்கு கூடியிருப்பது வித்தியாவை கொலை செய்ய காரணமாக இருந்தவர்கள் அனைவருக்கும் தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்று கோரியும், இவ்வாறான பாலியல் கொடுமைகள் நடப்பது இதுவே இறுதி சம்பவமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தும் தான் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

ad

ad