தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இன்று மாலை வவுனியாவில் அமைந்துள்ள சொர்க்கா விடுதியில் நடைபெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், என். சிறீகாந்தா, ஹென்றி மகேந்திரன், கருணாகரன்-ஜனா, சுரேஸ் பிறேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், தர்மலிங்கம் சித்தார்த்தன், கந்தையா சிவநேசன் (பவன்) ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடுகள் தொடர்பில் இன்றைய பேச்சுவார்த்தை முன்னேற்றகரமானதாக அமைந்திருந்த போதிலும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.
மேலும் இக்கூட்டத்தில் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.