புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜூன், 2015

அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த 78 பேர் கைது

சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கையர்கள் 78 பேர் கிறிந்த பிரதேசத்தில் இருந்து 65 கடல் மைல் தொலைவில் உள்ள கடல் பகுதியில் வைத்து இன்று அதிகாலை கைது செய்தததாக கடற்படை ஊடக பேச்சாளர் இந்திக்க சில்வா தெரிவித்துள்ளார்..
இன்று அதிகாலை 12.30 மணியளவில் கடற்படையினரால் இவர்களை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 17 சிங்களவர்களும், 59 தமிழர்களும் கப்பல் ஊழியர்கள் இருவரும் இருந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் தற்போது வரையில் காலி கடற்கரைக்கு அழைத்து வந்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையர்கள் சட்ட விரோதமாக கடற் வழியாக அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்க முயற்சித்ததாக கடந்த வருடங்கள் ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளியாகின.
நீண்ட காலத்திற்கு பின்னர் மீண்டும் இவ்வாறான செய்தி வெளியாகியுள்ளமை குறிப்பிடதக்கது.

ad

ad