புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூன், 2015

ஆறு பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை : யாழில் சம்பவம்


யாழ்.இந்துக்கல்லூரி கனகசபை ஒழுங்கையில்  6 பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 
 
இச்சம்பவம் இன்று  காலை 7.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
 
 
குறித்த சம்பத்தில் 63 வயதுடைய கமலநாதன் என்பவரே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டவராவார்.
 
 
மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
 
 
இன்று காலை 7.50 மணியளவில் வீட்டின் பின்புறமாக இருந்த வெற்றுக்காணியில் உள்ள வேப்பரம் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால் குடும்பத்தாருக்கு தெரியவில்லை.எனினும் அயலவர்கள் அறிந்து குடும்பத்தாருக்கு அறிவித்ததுடன் யாழ்.பொலிஸாருக்கும் அறிவித்தனர்.
 
குறித்த இடத்திற்கு வந்த யாழ்.பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
 
மேலும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர் நீண்ட காலம் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார் என்றும் அதனாலேயே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது.

ad

ad