புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூன், 2015

விமல் வீரவன்ஸ மனைவியிடம் விசாரணை


news

 
 




















நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவிடம் நிதிக்குற்ற தடுப்புப் பிரிவினர் இன்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
 
காணி ஒப்பந்தமொன்றில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி குறித்து சஷியிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காகவே அவர் நிதி மோசடி தடுப்புப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
 
சஷியை ஏற்கனவே கடந்த மே மாதம் 28ஆம் திகதி விசாரணைக்கு அழைத்திருந்த போதும் சுகயீனம் காரணமாக அவர் அன்றைய தினம் விசாரணைகளுக்கு செல்லவில்லை.
 
இதேவேளை போலி ஆவணங்களை தயாரித்து ராஜதந்திர கடவுச்சீட்டை தயாரித்தார் என் குற்றச்சாட்டில் சஷி ஏற்கனவே கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
இதேவேளை நாட்குறிப்புகள் மற்றும் நாட்காட்டிகளுக்காக ஒன்றரை கோடி ரூபாவை விமல் வீரவன்ச செலவிட்டார் என குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
இந்நிலையில் எதிர்வரும் காலங்களில் விமல் வீரவன்சவும் நிதிக்குற்ற தடுப்பு விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்படுவார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

ad

ad