புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூன், 2015

இடைத்தேர்தல் முடிந்தவுடன் சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்படும்; வெங்கையா நாயுடு பேச்சு



ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியின் இடைத் தேர்தல் முடிந்தவுடன், சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கி வைக்கப்படும் என்று மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கூறினார். 

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஓர் ஆண்டு சாதனை விளக்கக் கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி வெங்கையாநாயுடு கலந்து கொண்டு பேசுகையில்,

இந்த நிகழ்ச்சி பா.ஜ.க.வின் நிகழ்ச்சி அல்ல. பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு இதுவரை மேற்கொண்டுள்ள பணிகளை அறிக்கையாக பொதுமக்கள் முன்பு சமர்ப்பிக்கும் நிகழ்ச்சியாகும். ஊடகங்கள் எல்லாம் நரேந்திர மோடியின் ஆட்சி, தொழிலதிபர்களுக்கு ஆதரவான ஆட்சி என்று விமர்ச்சிக்கின்றன. 

நரேந்திரமோடி ஆட்சிக்கு வந்த பின்னர், உலக நாடுகள் மத்தியில் இந்தியாவுக்கு மரியாதையும், மதிப்பும் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.6 சதவீதத்தில் இருந்து 7.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதே வேகத்தில் இந்தியா முன்னேறினால், 3 அல்லது 4 ஆண்டுகளில் சீனாவை இந்தியா மிஞ்சிவிடும் என்று உலக வங்கியே கருத்து தெரிவித்துள்ளது. 

மேலும், நிலம் கையகப்படுத்தும் சட்டம் அமலுக்கு வந்தால், பொதுமக்கள் நிலம் எல்லாம் பறிபோகும் என்றும் அந்த நிலங்கள் எல்லாம் தொழிலதிபர்களுக்கு வழங்கப்பட்டு விடும் தவறான தகவல் பரப்புகின்றனர். அப்படி ஒரு எண்ணம் மத்திய அரசுக்கு கிடையாது என்பதை உறுதியளிக்கிறேன். 

தற்போது சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதல் கட்டப் பணி முடிவடைந்து விட்டது. ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதால், சென்னையில் தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளது. எனவே, இடைத்தேர்தல் முடிந்ததும், மெட்ரோ ரெயில் சேவை தொடங்கி வைக்கப்படும். விரைவில் மெட்ரோ ரெயில் சென்னையில் ஒரு பகுதியில் ஓடத் தொடங்கும். இவ்வாறு பேசினார்.
 

ad

ad