புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜூன், 2015

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வு


சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாக்குச் சேகரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரசாரம் இன்று வியாழக்கிழமை மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.  அதன்பிறகு, தொகுதிக்கு தொடர்பில்லாத வெளியூர் நபர்கள் அனைவரும் தொகுதியில் இருந்து வெளியேற வேண்டுமென தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் வியாழக்கிழமை மாலை 5 மணியில் இருந்து அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள், மதுக் கூடங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ad

ad