புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜூன், 2015

பிரதமரின் உத்தரவில் மஹிந்தவிற்கு உலங்கு வானூர்தி


பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவிற்கு அமைய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு உலங்கு வானூர்தி ஒன்று வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கு அதி கூடிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு வாகனங்கள், பாதுகாப்பு அதிகாரிகள் அதிகளவில் வழங்கப்பட்டுள்ளனர்.
இதுவரையில் எந்தவொரு முன்னாள் ஜனாதிபதிக்கும் வழங்கப்படாத அளவிற்கு அதிகளவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை.
மஹிந்தவிற்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்பட்டுள்ளதாகவோ பொலிஸ் திணைக்களம் அறிவிக்கவில்லை.
மக்களின் அனுதாபத்தைப் பெற்றுக்கொள்ள இவ்வாறு முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவான தரப்பினர் பிரச்சாரம் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad