புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூன், 2015

பிரதமருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவர சு. க. வில் எவருக்கும் அருகதை இல்லை ஐ.தே.க.,மு.கா.,ரி.என்.ஏ.,ஜே.வி.பி.


கடும் எதிர்ப்பு

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களின் கூத்து எனவும் தெரிவிப்பு
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள 112 பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டு சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்கச் செய்வதற்குத் தேவையான அனைத்து விதமான நடவடிக்கைகளிலும் தாம் தீவிரமாக இறங்கிச் செயற்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் உறுதி
தெரிவித்துள்ளன.
பாராளுமன்றத்தில் தற்போது எமக்கே பலம் உள்ளது. எமது ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் மிகவும் ஒற்றுமையாக இருக்கின்றனர். அத்துடன் சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் எம்முடனேயே உள்ளன. பிரதமருக்கு எதிராக கொண்டுவரும் நம்பிக்கை இல்லா பிரேரணையை ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை. பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக் கப்பட்டால் அதை தோற்கடிப்போம்.
பிரே ரணை கொண்டு வந் தாலும் அதை எதிர்த்து வாக்களிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை எம்மிடமே அதிகமாக உள்ளது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கா தெரிவித் துள்ளார்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு நாம் ஒருபோதும் ஆதரவு தெரிவிக்க மாட்டோம் என முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி இவ்விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளார். ஒரு தனி மனிதனை பழிவாங்கவே இவ்வாறான பிரேரணை கொண்டுவரப்படுகின்றதே தவிர இதனால் நாட்டுக்கு எந்த பயனும் இல்லை.
ஆகவே இந்த நம்பிக்கை இல்லா பிரேரணையை நிராகரிக்க வேண்டும். மேலும் இப்போது நடைமுறையில் இருக்கும் பாராளுமன்றமானது ஐந்து வருடங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டதாகும்.
ஆனால் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இதில் பலரை மக்கள் நிராகரித்து விட்டனர். மக்கள் இப்போது தமக்கான புதிய தலைவர்களை நியமித்துள்ளனர்.
ஆகவே பிரதமருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணையை கொண்டுவர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் எவருக்கும் அருகதை இல்லை. எனவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணையை ஒருபோதும் ஆதரிக்காது என்றார்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவருவது என்பது சாத்தியமற்றதாகும். அப்படியே நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்தாலும் அதனை ஆதரிக்கும் எண்ணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இல்லை என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் பாராளுமன்றம் கூடிய போதும் பிரதமருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருவது தொடர்பில் இவர்கள் தெரிவித்தனர். ஆனால் ஒரு சந்தர்ப்பத்தி லேனும் அதை நிறைவேற்ற முடிய வில்லை. ஆகவே இனிமேலும் பிரதமருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டு வரும் சாத்தியம் இல்லை என்றார்.
கடந்த காலத்தில் பல சந்தர்ப்பங்களில் எதிர்க் கட்சியால் நம்பிக்கை இல்லா பிரேரணையை கொண்டு வருவதாக தெரிவித்தனர். ஆனால் இன்றுவரை ஒன்றையேனும் இவர்கள் கொண்டுவர வில்லை. தமது அரசியல் சுயநலத்துக்காக ஒருசிலர் சவால் விடுவதை நாம் பெரிது படுத்தவும் இல்லை. பிரேரணை கொண்டு வந்தால் அந்த சந்தர்ப்பத்தில் நாம் தீர்மானம் எடுப்போம்.
பிரேரணையை ஆதரிப்பதா அல்லது நிராகரிப்பதா என்பது தொடர்பில் இப்போது எந்த தீர்மானமும் இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்டார்.

ad

ad