புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூன், 2015

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ,இலங்கையின் அமைச்சர்,லண்டன் தமிழர் தரப்பு சந்திக்கிறார்கள்


இந்த வார இறுதியில் இலங்கை அரசாங்கமும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்தரப்பு செய்திகளின்படி லண்டனுக்கு சென்றுள்ள இலங்கையின் அமைச்சர் மற்றும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குறித்த ஆங்கில செய்தித்தாள் இலங்கையில் வெளியுறவுத்துறை அமைச்சை வினவியபோது, வெளிநாடுகளில் வாழும் இலங்கையின் பல்வேறு இனக்குழுக்களின் புலம்பெயர்ந்தோர் குழுக்களுடன் நல்லிணக்கம் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்கின்றன என்று பதில் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழர் பிரச்சினைக்கான தீர்வு மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேசத்தயார் என்று லண்டனில் உள்ள உலக தமிழர் பேரவை கடந்த வாரத்தில் அறிவித்திருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை தென்னாபிரிக்க அரசாங்கத் தரப்பும் உலக தமிழர் பேரவையுடன் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தது.

ad

ad