புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூன், 2015

டெல்லிக்குப் புதிய சட்டத்துறை அமைச்சராக கபில் மிஸ்ரா நியமனம்!


 போலி கல்விச் சான்றிதழ் பெற்றதாக டெல்லியின் முன்னாள் சட்ட அமைச்சர் ஜிதேந்தர் சிங் டோமர்  கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் புதிய சட்ட அமைச்சராக கபில் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டப்படிப்பு படித்ததாக போலி சான்றிதழ் வைத்திருந்த வழக்கில் முன்னாள்  டெல்லி மாநில சட்ட அமைச்சர் ஜிதேந்தர் டோமர் நேற்று அம்மாநில போலீசாரால் கைது
செய்யப்பட்டார்.

இதை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்த அவர், முதல்வர் கெஜ்ரிவாலிடம் கடிதம் கொடுத்துள்ளார். இந்நிலையில் அம்மாநில புதிய சட்ட அமைச்சராக அக்கட்சி எம்.எல்.ஏ.வும், குடிநீர் வாரிய துணைத் தலைவருமான கபில் மிஸ்ராவை நியமித்து முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். 

இன்று பிற்பகல் 3 மணியளவில் ஆளுநர் நஜிப் ஜங்கை சந்திக்க உள்ள கெஜ்ரிவால், அவரிடம் டோமரின் ராஜினாமா கடிதம் மற்றும் கபில் மிஸ்ராவை சட்ட அமைச்சராக நியமித்ததற்கான கடிதம் ஆகியவற்றை  சமர்ப் பிப்பார்.

ad

ad