புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜூன், 2015

காரைநகர் பிரதேச சபை தவிசாளர் கைது ; நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை


காரைநகர் பிரதேச சபை தவிசாளர் வே . ஆனைமுகன் உள்ளிட்ட ஐவரை ஊர்காவற்றுறைப் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். 
 
கைது தொடர்பில் பொலிஸார் தெரிவித்தாவது, 
 
கடந்த மாதம் 22 ஆம் திகதி  ஆனைமுகன் மேலும் நால்வரை அழைத்துச் சென்று காரைநகர் -வலந்தலையில் உள்ள ஒருவரின்  வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரைத்தாக்கியுள்ளனர்.
 
தாக்குதலுக்கு இலக்கானவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்னரே வீடு செல்ல அனுமதிக்கப்பட்டார். 
 
அதன்படி தாக்குதலுக்கு இலக்கானவரால் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்தே நேற்று குறித்த ஐவரும் கைது செய்யப்பட்டனர். 
 
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் குறித்த நபர் பெண் ஒருவரை கேலி செய்தமையினாலேயே தாங்கள்  அவரைத் தாக்கியதாக தெரிவித்துள்ளனர். 
 
இன்று ஊர்காவற்றுறை நீதிவானின் உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தில் முற்படுத்தப்படவுள்ளனர் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். 

ad

ad