புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூலை, 2015

ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான வாக்கெடுப்பு 2020 ல் நடத்த கனடிய தமிழர் தேசிய அவை தீர்மானம்


ஈழத்தமிழரின் இறையாண்மைக்கான சர்வஜன வாக்கெடுப்பின் முக்கியத்துவம் இன்று மிகவும் கனிந்து வருகின்றது. 2009ல் இன அழிப்பின் உச்சத்தை ஈழத்தமிழர்கள்
சந்தித்ததன் பின்புதான் உலக அரசாங்கங்கள் தமிழர் தரப்பு நியாயங்களை செவிமடுப்பதும் ஏற்றுக் கொள்வதுமான ஒரு சூழ் நிலைக்கு தங்களை ஆட்படுத்தியிருக்கின்றார்கள்.
படுகொலை ஆதாரங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் இச்சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் தமக்கான ஒரு சரியான அரசியல் தீர்வை, சரியான தளத்தில் முன்வைப்தென்பது இன்று அவசிய மாகின்றது.
முள்ளிவாய்க்கால் படுகொலையின் பின்பல்வேறு கோரிக்கைகள் பல்வேறு தமிழர் தரப்பினரும் முன்வைத்து அனைத்துலகத்திடம் நீதி வேண்டி போராடி வந்த சூழலில் கனடியத் தமிழர் தேசிய அவையானது (னிவிவிஹி) அனைத்து கோரிக்கைகளையும் உள் ளடக்கியவாறான மூன்று அம்ச கோரிக் கைகளை முன்வைத்தது. அக்கோரிக் கைகளானது:
1. ஈழத் தமிழர்களுக்கு காலம் காலமாக நடைபெறவது இன அழிப்பே,
2. போர்க்குற்றம், மானிடத்திற்கு எதிரான குற்றம் மற்றும் படுகொலைகளுக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை,
3. ஐ.நா.வின் மேற்பார்வையில் ஈழத்தமிழர்களின் இறையாண்மைக்கான சர்வஜன வாக்கெடுப்பு.
தமிழகத்தில் 36 அமைப்புக்களுடன் கண்டியத் தமிழர் தேசிய அவை, இணைந்து மேற்கொண்ட ஒரு கோடி கையெழுத்து போராட்டத்திலும் இம் மூன்று கோரிக்கைகளை அடிப்படையாக வைத்தே கையெழுத்துகள் பெறப்பட்டன.
2013 ல் கனடியத் தமிழர் தேசிய அவை, ஜெனிவாவில் 14 நாடுகள் அங்கம் வகிக்கும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையுடன் இணைந்து முன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து பல நாடுகளிலிருந்தும் 40ற்கும் மேற் பட்ட முக்கியமான பல்லின சமூக பிரதிநிதிகளை உள்ளடக்கிய அனைத் துலக தமிழர் மாநாட்டை நடத்தி யிருந்தது.
இம் மாநாட்டில் முக்கிய கருப்பொருளாக பேசப்பட்ட தமிழின அழிப்பு என்ற கருப்பொருளில் கனடிய பாராளுமன்ற உறுப்பினர்களான பற்றிக் பிரவுண் மற்றும் ஜிம் கரிக்கியானிஸ் ஆகியோர் முதன் முதலாக ஈழத்தமிழர்களுக்கு இடம்பெற்றது இன அழிப்பே என்ற தமது கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.
கனடாவில் - மார்க்கம் நகர சபையிலும், இத்தாலியில் பலர் மோ நகர சபையிலும், இந்தியாவில் - தமிழக சட்ட சபையிலும் மற்றும் ஈழத்தில் - வடமாகாண சபை யிலும் ஈழ தமிழர்களுக்கு இடம்பெற்றது அநீதியென வலியுறுத்திய தீர்மானங்கள் வெளிவந்தன.
மாகாணக் கட்சித் தலைவராக பற்றிக் பிரவுண் மேம்பட்ட பின்பும் கடந்த மே 2015ல் இடம்பெற்ற கனடிய தமி ழர் தேசிய அவையின் ஒருங்கிணைவில் இடம்பெற்ற தமிழின அழிப்பு நினைவு தினத்தில் தொடர்ந்தும் இடம்பெறும் தமிழன அழிப்பை வெளிப்படையாக நினைவு கூர்ந்திருந்தார்.
இவ்வாறான கால சூழ் நிலைகள் கனிந்து வரும் இக்காலத்தில் ஈழத் தமிழர்கள் ஒன்றுபட்டு தமது இறையாண்மைக்கான தளத்தை உருவாக்குவதென்பது முக்கியமாகின்றது. இவ்வாறான எண்ணக்கருவுடன் கனடிய தமிழர் தேசிய அவை கனடாவிலும், அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை மற்றய நாடுகளிலும் ‘தமிழர் சுய நிர்ணய உரிமைக்கான சர்வஜன வாக்கெடுப்பு’ வருட 2020 ல் வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக் கையை முன்வைத்து ஒரு பாரிய வேலைத் திட்டத்தை உருவாக்கி உள்ளன. இவ் வேலைத் திட்டத்திற்கான ஆதரவை கனடிய தமிழர் தேசிய அவையினர் அனைவரிடமும் எதிர்பார்த்து நிற்கின்றனர்.

ad

ad