புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜூலை, 2015

மதுபான பாரில் ரகசிய அறை அமைத்து ஆபாச நடனம் அழகிகள் உள்பட 25 பேர் கைது


மதுபான பாரில் ரகசிய அறை அமைத்து ஆபாச நடனம் ஆடிய 10 அழகிகள் உள்பட 25 பேரை போலீசார் கைது செய்தனர். 


ரகசிய தகவல் 

மும்பை சயான் கோலிவாடா பஞ்சாபிகேம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மதுபான பார் உள்ளது. இந்த மதுபான பாரில் சட்டவிரோதமாக ஆபாச நடனம் நடைபெறுவதாக சமூக குற்றத்தடுப்பு துணை போலீஸ் கமிஷனர் பிரவின் பாட்டீலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் போலீசார் நேற்று அதிகாலை 4 மணி அளவில் சம்பந்தப்பட்ட மதுபான பாருக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை மேற்கொண்டனர். 

அப்போது மதுபான பாருக்குள் யாரும் இல்லை. இதனால் குழப்பம் அடைந்த போலீசார் மதுபான பாருக்குள் அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர்.

25 பேர் கைது 

அப்போது அங்கு ரகசிய அறை அமைக்கப்பட்டு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து போலீசார் அங்கு இருந்த சுவரை இடித்து ரகசிய அறைக்கு சென்றனர். அப்போது அங்கு அறைகுறை ஆடையுடன் வாடிக்கையாளர்களுடன் ஆபாச நடனத்தில் அழகிகள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு இருந்த 10 அழகிகள், பார் உரிமையாளர் சுரேந்திர சிங் அப்ரோல் மற்றும் மேலாளர், காசாளர், வாடிக்கையாளர் என 25 பேரை கைது செய்தனர். மேலும் அங்கிருந்த ரூ.45 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து அண்டாப்ல் போலீசார் வழக்கு பதிவு செய்து, கைதான 25 பேரையும் நேற்று போய்வாடா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

ad

ad